பாகிஸ்தானில் விசேட கண்டன தினம் பிரகடனம்

பாகிஸ்தானில் விசேட கண்டன தினம் பிரகடனம்

பிரியந்த குமார தியவதனவை நினைவுகூரும் வகையிலும், இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும் பாகிஸ்தானில் விசேட கண்டன தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று வெள்ளிக்கிழமை விசேட கண்டன தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 08 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 140 இற்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 34 பேர் பிரதான சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பல்வேறு அரசியல் தலைவர்களும் பாகிஸ்தானிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

நன்றி- தினகரன்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image