பாக். பிரதமரை பாராட்டியுள்ள அஸ்கிரிய மாநாயக்க தேரர்!

பாக். பிரதமரை பாராட்டியுள்ள அஸ்கிரிய மாநாயக்க தேரர்!

கடந்த வௌ்ளிக்கிழமை (03) இலங்கையரான பிரியந்த குமார மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என அஸ்கிரிய மா நாயக்கர் சங்கைக்குரிய வரக்காபொல ஶ்ரீ ஞானரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அஸ்கிரிய மாநாயக்க தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் நடந்த உடனேயே, பாகிஸ்தான் பிரதமர் இந்த தாக்குதலை உடனடியாக கண்டித்து, கொலையில் தொடர்புடைய தீவிரவாதிகளை கைது செய்வதை உறுதி செய்து, அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

பாகிஸ்தான் பிரதமரின் நடவடிக்கைகள், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் சியல்கோட் நகரில் தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்த நிலையில் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கி கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியைகள் நேற்று (08) நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image