பிரான்சுக்கான நேரடி விமானசேவை மீண்டும் ஆரம்பம்

பிரான்சுக்கான நேரடி விமானசேவை மீண்டும் ஆரம்பம்

இலங்கைக்கும் பிரான்சுக்குமான நேரடி விமானசேவை இன்று (01) அதிகாலை ஆரம்பமானது.

6 வருடங்களின் பின்னர் பிரான்சுக்கான நேரடி விமானசேவை ஆரம்பமாகின்றமை விசேட அம்சமாகும்.

ஶ்ரீலங்கன் எயார்லைன்சுக்கு சொந்தமான UL 564 விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று தொடக்கம் வாரத்திற்கு 2 தடவைகள் பிரான்சுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமானசேவை ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கும் பிரான்சுக்குமான நேரடி விமானசேவை கடந்த 1980ம் ஆண்டு ஆரம்பமானது. பல்வேறு காரணங்களினால் கடந்த 2015ம் ஆண்டு ​நேரடி சேவை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image