ரோமில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் பலி

ரோமில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் பலி

இத்தாலியின் ரோம் நகரில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

வெலிவேரிய, நெதுன்கமுவ பிரதேசத்தை சேர்ந்த சுப்புன் ஹிருண பெரேரா என்ற 32 வயது நபரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கம்பஹா பிரதேசசபை உறுப்பினரும் ஆசிரியருமான சச்சினி செவ்வந்தி செனவிரத்னவின் கணவரான சுப்புன் ஒரு குழந்தையின் தந்தையாவார்.

சடலத்தை இலங்கை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image