போலி வீசாவுடன் வௌிநாடு செல்ல முற்பட்ட இருவர் கைது!

போலி வீசாவுடன் வௌிநாடு செல்ல முற்பட்ட இருவர் கைது!

போலி வீசாக்களை பயன்படுத்தி ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு செல்ல முற்பட்ட இருவரை குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் நேற்று (11) கைது செய்தனர்.

டுபாயூடாக ஜெர்மனி மற்றும் கடனா செல்ல முற்பட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனடா செல்ல முற்பட்டவர் சாவகச்சேரி பிரதேசத்தை சேர்ந்த 35 வயது நபர் எனவும் போலி ஜெர்மனி வீசாவினூடாக செல்ல முற்பட்டவர் பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த 29 வயது பெண் என்றும் குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று அதிகாலை 12.20 மணிக்கு டுபாய் நோக்கி செல்லவிருந்த ப்ளை டுபாய் விமானசேவையின் எப் இஸட் 558 இலக்க விமானத்தினூடாக செல்லவிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image