புலம்பெயர் தொழிலாளர் அனுப்பும் பணத்தினூடாக மேலதிக பணத்தைப் பெற

புலம்பெயர் தொழிலாளர் அனுப்பும் பணத்தினூடாக மேலதிக பணத்தைப் பெற

புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்தை அமெரிக்க டொலர்களில் இருந்து இலங்கை ரூபாவாக பரிமாற்றம் செய்வதற்கு ஒரு டொலருக்கு 2 ரூபா வீதம் ஊக்குவிப்புத் தொகையை வழங்கும் திட்டத்தை வரவுசெலவு 2021 இல் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவானது அனுமதி பெற்ற வங்கிகளினூடாக செயற்படுத்தப்படுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனூடாக குறித்த வங்கி பயன்படுத்தும் மேலதிகப் பணச் செலவை அரசாங்கமே பொறுப்பேற்கவுள்ளது. இந்நிதிச் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கான வழிகாட்டல்களை இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ளது.

தம்மிடமுள்ள பணத்தை பாதுகாப்பாக இலங்கைக்கு அனுப்புவதற்கும், அப்பணத்தினூடாக மேலதிக பணத்தை சம்பாதித்துக்கொள்ளும் வகையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு அனைத்து இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இலங்கை நிதியமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image