போலி வதிவிட வீஸாவில் பிரான்ஸ் செல்ல முற்பட்ட வவுனியா யுவதி கைது

போலி வதிவிட வீஸாவில் பிரான்ஸ் செல்ல முற்பட்ட வவுனியா யுவதி கைது

போலி வதிவிட வீஸாவை பயன்படுத்தி கட்டார் வழியாக பிரான்ஸ் செல்ல முயன்ற யுவதி பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவை சேர்ந்த 21 வயதான குறித்த யுவதி நேற்று (20) கட்டார் எயார்வேஷுக்கு சொந்தமான QR 669 விமானத்தினூடாக கட்டார் செல்ல விமானநிலையத்திற்கு வருகைத் தந்திருந்தார்.

டிக்கட் கவுண்டரில் அவருடைய பிரான்ஸ் வதிவிட வீஸா குறித்து சந்தேகம் தோன்றியமையினால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் கட்டுநாயக்க விமானநிலையத்திலுள்ள குடிவரவு குடியழ்வு திணைக்கள கண்காணிப்பு பிரிவுக்கு அவருடைய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. அங்கு மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப பரிசோதனைகளின் போது ஆவணங்கள் போலியானவை என்று கண்டறியப்பட்டது. கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் ஒழுங்கான முறையில் பதிலளிக்க குறித்த யுவதி தவறியுள்ளார். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட குறித்த யுவதி மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமானநிலைய குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image