பிரியந்த குமார படுகொலை: மேலும் 18 பேர் கைது

பிரியந்த குமார படுகொலை: மேலும் 18 பேர் கைது

பாகிஸ்தான் சியல்கோட்டில், பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட மேலும் 18 சந்தேகநபர்கள், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குஜரன்வாலாவில் (Gujranwala) உள்ள, விசேட பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில், நேற்று அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்களை, எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக, பாகிஸ்தான் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னதாக 34 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளதென சியல்கோட் காவல்துறை பேச்சாளர் குர்ரம் சேஷேட் (Khurram Shehzad) தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மேலும் 100 இற்கும் அதிகமானோர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image