C190 சமவாயத்தினை இலங்கை அரசு அங்கீகரிப்பது அவசியம்!

C190 சமவாயத்தினை இலங்கை அரசு அங்கீகரிப்பது அவசியம்!

உலக தொழிலாளர் ஸ்தாபனம் முன்மொழிந்துள்ள C190 சமவாயத்தினை இலங்கை அரசு இதுவரை அங்கிகரிக்காது இருப்பது தொழிசார் சமூகத்தின் மீதுள்ள நம்பிக்கையை இழந்துள்ளதாகவே கருதவேண்டியுள்ளது என்கிறார் பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி நிறுவனம் தலைவர் தங்கவேல் கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

தொழில் சமூகத்தின் பாதுகாப்புக்கு மிக முக்கியமான விடயமான C190 சமவாயத்தினை உடனடியாக இலங்கை அரசு அமுல்படுத்துவதன் ஊடாக தொழிற்சார் மக்களையும், உலக தொழிலாளர் ஸ்தாபனத்தினையும் கௌரவப்படுத்தும் செயற்பாட்டாக காணமுடியும்.

பால்நிலைசார வன்முறைகளுக்கு ஒரு தீர்வாக முன்மொழியப்பட்டிருக்கும் C190 பரிந்துரையை முன்வைத்து செயற்படுத்துப்படும் பிரசார நடவடிக்கையின் ஊடாக இலங்கை அரசு அதீத கவனத்தினை ஏற்படுத்துவதற்கு தொழிலாளர்கள் அனைவரும் இதற்கான அழுத்தத்தினை கொடுக்க வேண்டும். அத்துடன் அதன் சார்ந்து கடமையாற்றும் தொழிற் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புக்குள் இதன் முக்கியத்துவத்தினை புரிந்து செயற்படுதல் அவசியமாகின்றது.

குறிப்பாக மலையக பெருந்தோட்ட துறையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் ஆணாதிக்க தொழில் மரபுகளில் இருந்து இன்னும் விடுபடவில்லை. அத்துடன் தமக்கான தொழில் உரிமைகளில் இருந்து புறக்கணிக்கப்பட்டவர்களாக பெருந்தோட்ட பெண்கள் இன்னும் இருக்கின்றனர் உதாரணமாக மலையக பெண்களுக்கு வேலைத்தளத்தில் சுகாதாரமும், பாதுகாப்பும் இன்னும் உறுதிப்படுத்தப்படாத ஒரு விடயமாக காணப்படுகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் C190 சமவாயம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பரிந்துரையாக இவர்களின் தொழில் துறையில் காணப்படும் வன்முறைகளுக்கு ஒரு தீர்வாக அமையும் என்பதில் ஜயமில்லை. அதோடு இன்று பெண்கள் பல தொழில் நிறுவனங்களிலும், தொழில் மையங்களிலும் கடமையாற்றுவதுடன், இரவு நேரங்களிலும் தொழில் செய்யக்கூடியவர்களாக மாறியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் இதுபோன்ற சட்டங்கள் இலங்கையில் அமுழ்படுத்துவதானது தொழில் துறையிலுள்ள அனைத்து பெண்களுக்கும் ஒரு சட்ட பாதுகாப்பை வழங்குவதற்கு உறுதுனையாக இருக்கும்.

C190 சமவாயத்தினை அமுல்படுத்தும்போது உள்நாட்டில் மாத்திரமல்ல வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்களுக்கும் ஒரு வரபிரசாதமாக அமையும் என்பதில் எவ்வித ஜயமில்லை. இது மேலும் பெண்களின் தொழில் ரீதியான வன்முறைகளை தடுப்பது மற்றுமன்றி தொழில் பாதுபாப்பினையும் உறுதி செய்யும் ஒரு முக்கிய பரிந்துரையாக அனைவராலும் பார்க்கப்படுகின்றது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image