சுகயீன லீவு போராட்டத்திற்கு தயாராகும் மின்சாரசபை ஊழியர்கள் கூட்டமைப்பு

சுகயீன லீவு போராட்டத்திற்கு தயாராகும் மின்சாரசபை ஊழியர்கள் கூட்டமைப்பு

எதிர்வரும் டிசம்பர் 8ம் திகதி சுகயீன லீவு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மின்சாரசபை ஊழியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

நாடு தழுவிய ரீதியில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அச்சங்கத்தின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அரச சொத்துக்களை வௌிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு எதிராக இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பெற்றோலிய மற்றும் துறைமுக ஊழியர்களும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் புகையிரத நிலையத்திற்கு முன்பாக வருவார்கள். ஊழியர்களின் கோபம், வெறுப்பு என்பவற்றை காட்டக்கூடிய மனுவும் இதன்போது கொண்டு வரப்பட்டு ஜனாதிபதியிடம் கையளித்து, துறைமுகம், மின்சாரம் மற்றும் பெற்றோலியம், மக்களின் மனசாட்சி என்பவற்றை விற்கவேண்டும் என்று அழுத்தமாக கூறுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image