800 சாரதிகள் மற்றும் 275 நடத்துனர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை

800 சாரதிகள் மற்றும் 275 நடத்துனர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை

புதிதாக 800 சாரதிகள் மற்றும் 275 நடத்துனர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையில் 1035 சாரதிகள் மற்றும் 450 நடத்துனர்களுக்கு வெற்றிடங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image