இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை இணைத்தல்: கல்வி அமைச்சின் அறிவித்தல்

இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை இணைத்தல்: கல்வி அமைச்சின் அறிவித்தல்

நாட்டின் தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கான சுற்றறிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி வெளியிடப்படும்.

அதன் பின்னர் இது தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளில் 2ஆம் ஆண்டு தொடக்கம் 4ஆம் ஆண்டு மற்றும் 7ஆம் ஆண்டு முதல் 10ஆம் ஆண்டு வரையிலான இடைநிலைத் தரங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பின்னர் உரிய சுற்றறிக்கைகளுக்கமைய செயற்பட வேண்டுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தேசிய பாடசாலைகளில் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான கடிதங்களை மறு அறிவித்தல் வரை கல்வி அமைச்சு வழங்காது எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image