உக்ரைனில் நிர்க்கதியான 6 இலங்கையர்கள் போலந்தை சென்றடைந்தனர்

உக்ரைனில் நிர்க்கதியான 6 இலங்கையர்கள் போலந்தை சென்றடைந்தனர்

யுத்தம் காரணமாக உக்ரைனில் நிர்க்கதியாகியுள்ள ஆறு இலங்கையர்கள், நேற்றும், நேற்று முன்தினமும் போலந்தை வந்தடைந்துள்ளதாக அந்த நாட்டிலுள்ள இலங்கை தூதுவர் தம்மிக்க குமாரி சேமசிங்க தெரிவித்துள்ளார்.

துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக, யுக்ரைனின் நிலைமை அவதானிக்கப்படுகிறது. இந்த நிலையில், யுக்ரைனில் இருந்து தரை மார்க்கமாக 37 இலங்கையர்கள் போலந்தை வந்தடைய விடுப்பம் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறிருப்பினும், தற்போதைய சூழ்நிலையில், யுக்ரைன் நாட்டவர்கள் உட்பட பெருமளவான வெளிநாட்டவர்கள், போலந்துக்கு பயணிக்கும் எதிர்பார்ப்பில் உள்ளமையால், எல்லை சோதனைச் சாவடிகளில், நீண்ட வரிசைகளை அவதானிக்க முடிவதாக போலந்தில் உள்ள இலங்கை தூதுவர் தம்மிக்க குமாரி சேமசிங்க தெரிவித்தார்.

மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image