55 வயதில் ஓய்வுபெற்றால் EPF, ETF வைப்புகளுக்கு என்னவாகும்?

55 வயதில் ஓய்வுபெற்றால் EPF, ETF வைப்புகளுக்கு என்னவாகும்?

தொழிற்சங்கத் தலைவர்கள் நீண்டகாலம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 60 வரை அதிகரித்த போதிலும், 55 வயதில் ஓய்வில் செல்ல விரும்பும் ஊழியர் ஒருவர் ஊழியர் சேமலாப (EPT), ஊழியர் நம்பிக்கை நிதிய (ETF) வைப்புக்களை பெறும் உரிமையை கொண்டுள்ளார் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற தேசிய தொழிலாளர் ஆலோசனை சபைக் கூட்டத்தில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தேசிய ஓய்வூதிய வயதெல்லை 60 வரை நீடிக்கப்படுமாயின்,

தற்போதைய கூட்டு ஒப்பந்தங்களில் கூறப்பட்ட விடயங்களையும் உள்ளடக்கிஇ புதிய சட்டத்தை திருத்த வேண்டிய அவசியம் உள்ளதாக முதலாளிமார் சம்மேளத்தின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க வீரசிங்க தெரிவித்தார்.

இந்த விடயத்தில் ஏதேனும் நியமங்களை சேர்க்கத் தேவை ஏற்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி, யோசனைகளை தம்மிடம் சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

அத்துடன், பேச்சுவார்த்தைக் குழுக்களை உடனடியாக கூட்டி, உரிய தீர்மானங்களை எடுத்து, தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image