26ஆம் திகதி முதல் இலங்கை வரும் விமானங்களுக்கு சலுகை

26ஆம் திகதி முதல் இலங்கை வரும் விமானங்களுக்கு சலுகை

எதிர்வரும் 26ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் 19ஆம் திகதி வரை விமானங்கள் தரையிறங்குவதற்கும் தரித்து நிற்பதற்குமான கட்டணங்களை அறவிடாதிருப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

விமான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் சுற்றுலாத்துறை அமைச்சர் இந்த திட்டத்தை நேற்று (21) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானம் வருமாறு,

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையங்களைத் திறப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதன் முன்னோடிக் கருத்திட்டமாக டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வரை சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளைப் பின்பற்றி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையங்களைத் திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய சுற்றுலாத்துறை அமைச்சும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையும் இணைந்து தயாரித்த விசேட நேர அட்டவணைகளுக்கமைய, சர்வதேச விமானக் கம்பனிகள் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.

தற்போது சர்வதேச விமானக் கம்பனிகள் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகளின் மத்தியில் சர்வதேச விமானக் கம்பனிகள் எமது நாட்டுக்கு மேற்கொள்ளும் விமானப் பயண நடவடிக்கைகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் விமானக் கம்பனிகளிடமிருந்து அறிவிடப்படும் தரையிறக்கல் மற்றும் தரித்து வைத்தல் கட்டணங்களை டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் விடுவிப்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image