5 மாவட்டங்களில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் - GMOA முன்னெச்சரிக்கை

5 மாவட்டங்களில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் - GMOA முன்னெச்சரிக்கை

இடமாற்ற பிரச்சினை காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை, 5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கையை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 
இது தொடர்பான மத்திய குழு கலந்துரையாடல் இன்று (17) இடம்பெறவுள்ளதாக அதன் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதன்படி, இன்று பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால், மன்னார், அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என கலாநிதி செனல் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image