வாரத்திற்கு 3 நாட்கள் மாத்திரமே சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பொது மக்கள் சேவை!

வாரத்திற்கு 3 நாட்கள் மாத்திரமே சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பொது மக்கள் சேவை!

செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அலுவலகங்களுக்குச் சமூகமளிக்க வேண்டாம் என்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரை, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை ஊழியர்களை பணிக்கு அழைக்கும் முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளமையினால் இவ்வறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

 அதற்கமைய, மே 30, 2022 முதல், ஊழியர்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பணிக்கு சமூகமளிக்க வேண்டும். திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அலுவலக நேரம் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை எனவும், அன்றைய தினங்களில் அலுவலகத்திலிருந்து பணிபுரியுமாறு அலுவலக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே குறித்த தினங்களில் பொதுமக்கள் அதிகாரசபையின் சேவைகளைப் பெற வருகைத் தரவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Gagana

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image