வௌ்ளிக்கிழமைகளில் தொழிற்திணைக்கள சேவைகள் நிறுத்தம்!

வௌ்ளிக்கிழமைகளில் தொழிற்திணைக்கள சேவைகள் நிறுத்தம்!

நாளை (03) தொடக்கம் மறு அறிவித்தல் வரை தொழிற்திணைக்கள தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகங்களை மூட தொழில் ஆணையாளர் நாயகம் தீர்மானித்துள்ளார்.

அரசாங்க செலவீனங்களை மட்டுப்படுத்தும் வகையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது மக்கள் இதனைக் கருத்திற்கொண்டு வௌ்ளிக்கிழமைகளில், ஊழியர் சேமஇலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் தொடர்பான சேவைகளைப் பெற கொழும்பு நாராஹேனபிட்டவில் அமைந்துள்ள தொழிற்திணைக்கள தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகங்களுக்கு செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

லங்காதீப

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image