235 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நியமனம்: நாளை 313 பேருக்கு நேர்முகப்பரீட்சை

235 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நியமனம்: நாளை 313 பேருக்கு நேர்முகப்பரீட்சை

கிழக்கு மாகாணத்தில் உள்ள அமைச்சுகள், திணைக்களங்கள், தேசிய பாடசாலை மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு 235 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண நிர்வாக பிரிவின் பிரதிப் பிரதம செயலாளர் ஏ.மன்சூர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ;

மாகாண அமைச்சுகள், மாகாண திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்காக 140 அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், தேசிய பாடசாலைகளுக்கு 34 அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், மாகாண பாடசாலைகளுக்கு 61 அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 31 பேரும், அம்பாறை மாவட்டத்திற்கு 30 பேரும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாளைய தினம் (07) 313 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கான நேர்முகப்பரீட்சையும் இடம்பெறவுள்ளதாகவும், அதில் 75 பேர் திணைக்களங்களுக்கும், 238 பேர் பாடசாலைகளுக்கும் நியமிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பான அறிவிப்பு

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image