மலையக மக்களுக்கான காணிகளை வழங்கும் திட்டம்!

மலையக மக்களுக்கான காணிகளை வழங்கும் திட்டம்!

பிரதான உற்பத்திக் காரணியான காணியை முறையற்ற விதத்தில் அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்பிற்கு எதிரான செயற்பாடாகும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

காணி உரிமையை முழுமையாக மக்களுக்கு வழங்குவதன் மூலம் சுதந்திரமான பொருளாதார செயற்பாட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என்றும், எனவே இது எதிர்கால பொருளாதாரத்திற்கான ஜனநாயக ரீதியிலான முதலீடாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணாயக்கார,

இம்முறை சமர்ப்பிக்க்ப்பட்ட வரவு செலவுத்திட்டம் தொடர்பில் அவதானம் செலுத்த முன்னர் நாம் கட்நது வந்த பாதை குறித்து மீட்டிப்பார்க்க வேண்டும். கடந்த வருடங்களில் இந்த நாடு இருந்த நிலை பற்றி இன்று பலரும் கதைப்பதில்லை. கொவிட் தொற்றுப்பரவல் காரணமாக நாடு தனது வழமையான செயற்பாட்டை இழந்ததுடன் முழுமையாக ஸ்தம்பித்து ஒரே இடத்தில் நின்றது என்று கூறலாம். அதன் ஊடாக நெருக்கடிகளை எதிர்கொண்ட பொருளாதாரம், பின்னர் நாட்டில் ஏற்பட்ட அரசியல், சமூக நிலையற்ற தன்மை காரணமாக பாரிய அளவில் வீழ்ச்சியடைத் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து அப்போதைய அரசாங்கம், இந்த நாட்டைப் பொறுப்பேற்குமாறு எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த போதிலும் இன்று எம்மை விமர்சிக்கும் எவரும் அன்று நாட்டிற்கு தலைமைத்துவம் வழங்க முன்வரவில்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தப் பாரிய சவால்மிக்க பொறுப்பை ஏற்றதுடன் மிகவும் அவதானமிக்க தீர்மானங்களை எடுத்து இந்நாட்டை தற்போது ஓரளவு ஸ்திரமான நிலைக்கு கொண்டு வந்துள்ளார். 2023 ஆம் வரவு செலவுத்திட்டத்தில் நாட்டை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்தும் விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதுடன், 2024 ஆம் வரவு செலவுத்திட்டத்தில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய வகையில் தமது வேலைத்திட்டங்களை சமர்ப்பித்துள்ளார்.

அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் காரணமாக 2022 ஆம் ஆண்டின் இறுதியில் 73.70% ஆக அதிகரித்த பணவீக்கத்தை தற்போது, ஒற்றை இலக்கமாகக் குறைக்க முடிந்துள்ளது. இதன் ஊடாக பணவீக்கத்தின் தாக்கத்தில் இருந்து நாட்டை மீட்க முடிந்தது. கடந்த வருடங்களில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு அரச வருமான இழப்பே பிரதான காரணமாக அமைந்தது. மீண்டும் அவ்வாரானதொரு நிலை ஏற்படாமல் இருப்பதற்காக அன்று நடைமுறைப்படுத்தப்பட்ட வரி விலக்குகள் உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும், இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மிகவும் வறுமையில் வாடும் மக்களுக்கான “அஸ்வெசும” நலன்புரிக் கொடுப்பனவுகளுக்காக சுமார் 183 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் 20 இலட்சம் குடும்பங்கள் நன்மை அடையவுள்ளனர். அதேபோன்று இதுவரை காணி உறுதிகள் வழங்கப்படாத மக்களுக்கு அவர்களின் காணிகளுக்கு முழு உரிமையுடன் கூடிய காணி உறுதிப்பத்திரங்களை வழங்கவும் மற்றும் அடுக்கு மாடிக் குடியிறுப்புகளில் வசிப்பவர்களுக்கு அந்த வீடுகளின் உரிமையை வழங்கவும் முன்மொழியப்பட்ட்டுள்ளது.

இதற்கு இணையாக மலையக மக்களுக்கான காணிகளை வழங்கவும் திட்டமிடப்படப்பட்டுள்ளது. மேலும், “பிம் சவிய” வேலைத்திட்டத்தை விரைவாக நிறைவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image