இடமாற்ற உத்தரவைப் பின்பற்றாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் - கல்வி அமைச்சு

இடமாற்ற உத்தரவைப் பின்பற்றாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் - கல்வி அமைச்சு

இடமாற்ற உத்தரவைப் பின்பற்றாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இடமாற்ற உத்தரவுக்கு அமைய செயற்படுமாறு உரிய ஆசிரியர்களுக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனினும், அதனைக் கருத்திற்கொள்ளாமல், ஆசிரியர்கள் அதே பாடசாலைகளில் பணிபுரிவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், சேவை தேவை காரணமாக சில ஆசிரியர்களை தற்போதுள்ள பாடசாலைகளில் தக்கவைத்துக் கொள்ளுமாறு அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அத்தகைய ஆசிரியர்களுக்கு இந்தத் தீர்மானம் பொருந்தாது எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

பற்றாக்குறை உள்ள பாடசாலைகளுக்கு உபரி ஆசிரியர்களை நியமிக்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image