தாதியர் சேவையில் 30,000 வெற்றிடங்கள்; வைத்தியசாலை செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என எச்சரிக்கை

தாதியர் சேவையில் 30,000 வெற்றிடங்கள்; வைத்தியசாலை செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என எச்சரிக்கை

தாதியர் சேவையில் 30,000-இற்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் S.C.மெதவத்த தெரிவித்தார். 

தாதியர்களை பயிற்சியில் இணைத்துக்கொள்வதில் நிலவும் தாமதத்தினால் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தாதியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

மூன்று வருடங்களாக உயர் மட்ட தாதியர்கள் பயிற்சிக்கு உள்வாங்கப்படவில்லை என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் S.C.மெதவத்த சுட்டிக்காட்டினார். 

இதன் காரணமாக மூன்று வருடங்களுக்குள் வைத்தியசாலையின் செயற்பாட்டில் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்தார். 
 
இந்நிலையில்,  தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பினை துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது. 

மூலம் - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image