தேர்தலில் போட்டியிடவுள்ள அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் அமைச்சரவை முக்கிய தீர்மானம்

தேர்தலில் போட்டியிடவுள்ள அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் அமைச்சரவை முக்கிய தீர்மானம்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த அரச ஊழியர்கள்,  இடமாற்றம் மூலம் சேவையில் ஈடுபட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் என்ற அடிப்படையில், பிரதமர் தினேஸ் குணவர்தன இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்பாளர்களாக வேட்புமனு சமர்ப்பித்துள்ள அரச உத்தியோகத்தர்கள் தொடர்பாக, தேர்தல்கள் நடத்தப்படும் வரையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தேர்தல்கள் ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அவதானிப்புகளை கருதிக்கொண்டு, அவ்வாறான அரச உத்தியோகத்தர்கள் தாம் வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிட உள்ள தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள அரச மற்றும் பகுதி நிலை அரச நிறுவனத்தில் கடமையில் ஈடுபட்டிருப்பின், அவர்கள் மீண்டும் கடமைக்கு சமூகமளிப்பதற்கு இயலுமாகும் வகையில் குறித்த தேர்தல் வட்டாரத்திற்கு வெளியே இடமாற்றம் செய்து கடமையில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக பிரதமரினால் இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image