அரை சொகுசு பஸ் சேவை நிறுத்தம்

அரை சொகுசு பஸ் சேவை நிறுத்தம்

 மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவையில் ஈடுப்பட்டு வந்த அரை சொகுசு பஸ் சேவையை அடுத்த மாதம் முதல் இரத்து செய்ய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் கடும் கண்டனத்துக்கு உள்ளான இந்த அரை சொகுசு பஸ் சேவையை இரத்து செய்யும்படி 2018 ஆம் ஆண்டு முதல் கோரிக்கைள் விடுக்கப்பட்டு வந்தாலும் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக அந்த பஸ் சேவையை இரத்து செய்ய முடியாது காணப்பட்டதாகவும் அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம்; தெரிவிக்கின்றது.

தொடர்ந்து விடுக்கப்பட்ட கோரிக்கையின் பலனாக இம்முறை அழுத்தங்களையும் மீரி இந்த அரை சொகுசு பஸ் சேவையை இரத்து செய்ய போக்குவரத்து அமைச்சும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் முன் வந்திருப்பது சிறப்பான விடயம் என்றும் அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

(பி.மாணிக்கப்பிள்ளை)

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image