189வது சரத்தினை இலங்கையில் உடன் அமுல்படுத்த வேண்டும் - பொன்னையா தெய்வானை

189வது சரத்தினை இலங்கையில் உடன் அமுல்படுத்த வேண்டும் - பொன்னையா தெய்வானை

பெண்களின் வாழ்விற்கான சம்பளம், சேமஇலாப விடயங்கள் மற்றும் தொழில் ரீதியாக கிடைக்க வேண்டிய கௌரவம் என்பவற்றை முறையாக நடைமுறைப்படுத்த கொள்கைகளையும் திட்டங்களையும் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என விடிவெள்ளி மகளிர் அமைப்பின் தலைவி பொன்னையா தெய்வானை கோரிக்கை விடுத்துள்ளார்.

அட்டன் பகுதியை சேர்ந்த 25 பெருந்தோட்டங்களின் பெண்களை அங்கத்தவர்களாக கொண்டு இயங்கி வரும் இந்த விடிவெள்ளி பெண்கள் அமைப்பு அட்டனில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

மலையக பெண்கள், கர்ப்பிணி தாய்மார் மற்றும் பிள்கைளின் போசக்கு தற்போது பெரும் சவாலுக்கு உட்பட்டுள்ளது. எனவே அதனை நிவர்த்திக்க அரசு முறையான வேலைத்திட்டங்கள் செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் தோட்டப்புறங்களில் இயங்கும் கோயில் அரங்காவலர் சபை மற்றும் நலன்புரி அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பு மிக மிக குறைவாக குறைவாகவே காணப்படுகின்றது எனவே இவற்றில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான வழிவகைகளை அரசு முன்மொழிய வேண்டும்.

மேலும் வீட்டு வேலைத் தொழிலில் ஈடுப்படும் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக உலக தொழிலாளர் ஸ்தாபனத்தின் 189வது சரத்தினை இலங்கையில் அமுல்படுத்த அரசு உடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கருப்பையா தெய்வானை கோரிக்கை விடுத்துள்ளார்.

மாதாந்த சுகயீனத்தின் (மாதவிடாய் காலம்) போது பெண்களுக்கு இரண்டு நாட்கள் சம்பளத்துடனான விடுமுறைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழில் சுமையை அல்லது தொழில் நேரத்தை அதிகரிப்பதால் பெண்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே பெண் தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்க அரசு நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கையை முன்வைத்தார்.
மேலும் சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ஆம் திகதி பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க அரசு உடன் நடவடிக்கைகளை முன்னெடுத்து செயற்படுத்த வேண்டும் என்பதுடன் பெருந்தோட்டதுறையில் பணிபுரியும் பெண்களுக்கு வனவிலங்கு தாக்குதல் மற்றும் இயற்கை அனர்த்தம் என்பவற்றில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு உடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் விடிவெள்ளி மகளிர் அமைப்பின் தலைவி பொன்னையா தெய்வானை கோரிக்கை விடுத்துள்ளார்.

(பி.மாணிக்கப்பிள்ளை)

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image