பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு குறித்து கல்வி அமைச்சரின் அறிவித்தல்

பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு குறித்து கல்வி அமைச்சரின் அறிவித்தல்

கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகளை விரைவாக முடித்துக்கொண்டு க.பொ.த. சாதாரண தர பரீட்சையை உரிய வகையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், அந்த பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் அதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆசிரியர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர்களுக்கு உச்ச அளவு கொடுப்பனவை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் இரண்டொரு தினங்களில் அவர்கள் அதற்கான முடிவை அறிவிப்பர் என்றும் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜயந்த சமரவீர எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவர் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image