போதைப் பொருட்கள் தொடர்பான ஆர்வம் மாணவர் மத்தியில் அதிகரிக்கும் நிலை!

போதைப் பொருட்கள் தொடர்பான ஆர்வம் மாணவர் மத்தியில் அதிகரிக்கும் நிலை!

மாணவர்களின் புத்தகப் பைகள் சோதனைக்கு உட்படுத்தப்படுத்துவதனால், போதைப்பொருள் தொடர்பான ஆர்வம் அவர்கள் மத்தியில் ஏற்படுத்துதப்படுவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜெயசிங்க இதனை தெரிவித்துள்ளார் . இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்

இந்த விடயத்தில் சிறார்களின் மனநிலை குறித்து அவதானம் செலுத்த வேண்டும்

 போதைப்பொருளைத் தடுப்பதற்காக, மாணவர்களின் பைகளை சோதனையிடும்போது, போதைப்பொருள் குறித்து அறிந்துகொள்ள அவர்கள் ஆர்வம் காட்டும் போக்கு ஏற்படும்.

எனவே, பொலிஸ் அதிகாரிகளைப் பயன்படுத்தி, மாணவர்களின் பைகளை பரிசோதிப்பதற்கு, தமது சங்கம் எதிர்ப்பு வெளியிடுவதாக, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image