அரச ஊழியர்கள் பணிக்கு சைக்கிளுக்கு செல்வதை ஊக்குவிக்க திட்டம் அறிமுகம்!

அரச ஊழியர்கள் பணிக்கு சைக்கிளுக்கு செல்வதை ஊக்குவிக்க திட்டம் அறிமுகம்!

அரச ஊழியர்கள் கடமைக்கு செல்ல சைக்கிளை பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டமொன்று நேற்று (31) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருட்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சைக்கிள் டு வொர்க் என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் ஆரம்பமாக நேற்று (31) பத்தரமுல்லையில் இருந்து செத்சிறிபாய வரை அரச ஊழியர்கள் குழுவொன்று சைக்கிளில் பயணித்தது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image