கடமையில் ஈடுபட்டிந்த இரண்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்!

கடமையில் ஈடுபட்டிந்த இரண்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்!

கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

வெல்லவாய பிரதேச செயலக காரியாலயத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், வெல்லவாய -மொனராகலை வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில், கடந்த 10ஆம் திகதி ஒழுங்கமைக்கப்பட்ட குழு ஒன்றினால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

 

அதேநேரம் மீரிகம கூட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். மீரிகம பிரதேச செயலகத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அபவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், மீரிகம பிரிவின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, நேற்றைய தினம்  அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் வழங்குவதற்காக, குறியீட்டு முறைமையை பரிசோதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image