அரச நிறுவனங்கள், பாடசாலைகளுக்கு மீண்டும் இணையவழி முறைமை குறித்து அவதானம்

அரச நிறுவனங்கள், பாடசாலைகளுக்கு மீண்டும் இணையவழி முறைமை குறித்து அவதானம்

மீண்டும் இணையத்தள முறைமையில் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை இயக்குவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலைமைக்கு மத்தியில், அடுத்த திங்கட்கிழமை முதல் ஓரிரு வாரங்களுக்கு, அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை இணையத்தள முறையில் இயக்குவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்துவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இன்று இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளதாகவும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் குறித்து ஆராயப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image