அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அடுத்த வாரம் முதல் அமுல்

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அடுத்த வாரம் முதல் அமுல்

வெள்ளிக்கிழமைகளில், அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரசதுறை ஊழியர்களுக்கு விடுமுறையை அறிவித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்த சுற்றறிக்கையின் ஏற்பாடுகள் எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளன.
 
நீர், மின்சாரம், சுகாதாரம், பாதுகாப்பு சேவைகள், கல்வி, போக்குவரத்து, துறைமுகம் மற்றும் விமான நிலையம் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு இந்த சுற்றறிக்கை ஏற்புடையதாகாது.
 
விடுமுறை வழங்கப்படும் அரச உத்தியோகத்தர்களை, குறித்த தினத்தில் வீட்டுத்தோட்டம் அல்லது குறுகிய கால உணவுப் பயிர் உற்பத்தியில் ஈடுபட ஊக்குவித்தல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேநேரம் நீதித்துறையுடன் தொடர்பான நிறுவனங்கள் தொடர்பில் குறித்த அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அவசியமான ஆலோசனைகள் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image