மின்சாரசபை தொழிற்சங்கங்கள் - அமைச்சருக்கிடையில் சந்திப்பு

மின்சாரசபை தொழிற்சங்கங்கள் - அமைச்சருக்கிடையில்  சந்திப்பு

இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்களுக்கும் மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேக்கரவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று (08) மாலை நடைபெறவுள்ளது.

உத்தேச மின் திருத்தச் சட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்காதிருக்க தீர்மானித்தால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை என இச்சந்திப்பில் தெரிவிக்க தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

ஏதாவது காரணத்திற்காக நாளை (09) உத்தேச திருத்தச் சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படுமாக இருந்தால் இன்று (08) நள்ளிரவு தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image