பொலிஸ் ஊரடங்கு புதன்கிழமை வரை நீடிப்பு!

பொலிஸ் ஊரடங்கு புதன்கிழமை வரை நீடிப்பு!

நாட்டில் இன்று ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் புதன் கிழமை (11) வரை அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து நாட்டில் பல பிரதேசங்களில் வன்முறை சம்பவங்கள்

இடம்பெற்றத்தையடுத்து இன்று (09) மாலை 7.00 முதல் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது..

பொது மக்கள் பாதகாப்பு சட்டத்தின் 16 ம் பிரிவுக்கமயை இவ்வூரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் பொது பாதைகளில் மக்கள் நடமாட்டம், ரயில் நிலையங்கள், பொதுப்பூங்காக்கள் அனுமதியின்றி நடமாடுவது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தககது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image