குளவிக்கொட்டுக்கிலக்காகிய தோட்டத் தொழிலாளர்கள்!

குளவிக்கொட்டுக்கிலக்காகிய தோட்டத் தொழிலாளர்கள்!

பொகவந்தலாவ - மோரா மேல் பிரிவு தோட்டத்தில் 9 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ - மோரா மேல் பிரிவு தோட்டத்தில் இல-12ஆம் தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்த சம்பவம், இன்று காலை 8.30 மணியளவில் இடம் பெற்றதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

காயங்களுக்கு உள்ளான ஒன்பது பெண் தொழிலாளர்களும் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி பஸ்நாயக்க தெரிவித்தார்.

தொடர்பான செய்திகளுக்கு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக இ.தொ.கா முன்நின்று செயற்படும்

பொகவந்தவாலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது...

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image