நம்பிக்கையில்லா பிரேரணையில் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்க இ.தொ.கா தீர்மானம்

நம்பிக்கையில்லா பிரேரணையில் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்க இ.தொ.கா தீர்மானம்
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
 
கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தமது பேஸ்புக் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளார்.
 
நாட்டில் தற்போது அரசியல் ,பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியலமைப்பின் 20வது சீர்திருத்தத்தை இரத்து செய்யவும் ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.
 
எனவே நாட்டு மக்களினதும் மலையகப் பெருந்தோட்ட மக்களின் நலன் கருதியும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உயர் பீடமானது நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளது என அதன் உயர்பீடம் தெரிவித்துள்ளது.
 
Jeevan_FB.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image