அதிபர் - ஆசிரியர்களின் வேலைநிறுத்ததிற்கு வடமாகாண ஆசிரியர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும்

அதிபர் - ஆசிரியர்களின் வேலைநிறுத்ததிற்கு வடமாகாண ஆசிரியர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும்

நாளை (25) நாடுதழுவிய ரீதியில் நடைபெறும் அதிபர் ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு வட மாகாண ஆசிரியர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வடமாகாண கிளை ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 
யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கையில்,
 
மக்களை வதைக்கும் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு நாடு முழுவதும் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
 
இத்தருணத்தில் அதிபர் ஆசிரியர் சங்கம் என்ற ரீதியில் நாமும் அந்தப் போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதோடு எரிபொருள் விலை ஏற்றத்தால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரிதும் பாதிப்படைந்து இருக்கின்றார்கள்.
 
இதற்கு உடனடியாக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து மாணவர் கல்வியின் மீது அக்கறை செலுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image