மக்கள் போராட்டத்திற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்கள் ஆதரவு

மக்கள் போராட்டத்திற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்கள் ஆதரவு

அரசாங்கத்துக்கு எதிராக எழும்பியுள்ள மக்கள் எழுச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் ​போராட்டத்தை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, நாளை (19) இவ்வடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. நாளை குறித்த சங்கம் ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு ஊர்வலத்தில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்ககழங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் செயலாளர் ரொஹான் லக்சிறி தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image