காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுடன் பேச்சு நடத்த தயார் - பிரதமர்

காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுடன் பேச்சு நடத்த தயார் - பிரதமர்

காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்தப் பேச்சுவார்த்தைக்கு தயாரெனில், அவர்களின் பிரதிநிதிகளுக்கு தாம் அழைப்பு விடுப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார் என பிரதமர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிவிலக வேண்டும் என வலியுறுத்தி காலிமுகத்திடலில் இளைஞர்கள் ஆரம்பித்துள்ள போராட்டம் இன்று 5ஆவது நாளாகவும் தொடர்கிறது. இரவு பகலாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
 
இந்தப் போராட்டத்திற்கு, தொழிற்சங்கத்தினர், சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image