அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் நிதி அமைச்சின் அறிவித்தல்

அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் நிதி அமைச்சின் அறிவித்தல்

ஏப்ரல் மாதத்திற்கான அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பான அறிவிப்பை நிதி அமைச்சு விடுத்துள்ளது.

ஏப்ரல் மாதத்திற்கான அரச ஊழியர்களின் சம்பளம் இன்றைய தினம் செலுத்தப்படும் என நிதியமைச்சின் பிரதிச் செயலாளர் பிரயந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதத்திற்கான அரச ஊழியர்களின் சம்பளத்தையும் பண்டிகை முற்கொடுப்பனவையும் செலுத்துவதற்காக 9 ஆயிரத்து 750 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் பிரதிச் செயலாளர் கூறினார்.
 
ஏப்ரல் மாத ஓய்வூதியத்தைச் செலுத்துவதற்காக திறைசேரி 2 ஆயிரத்து 500 கோடி ரூபா ஒதுக்கியுள்ளது.
 
சமுர்த்திக் கொடுப்பனவை வழங்குவதற்குத் தேவையான 550 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதிச் செயலாளர் பிரியந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
 
அரசாங்க தகவல் திணைக்களம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image