இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு

பெருந்தோட்டத்துறையின் மிகப்பெரிய தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் கொட்டக்கலை சி.எல்.எஃப் வளாகத்தில் இன்று இடம்பெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் காலமானதை அடுத்து, கட்சிக்கு புதிய தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை.

இந்தநிலையில், இன்று இடம்பெற்ற தேசிய சபைக் கூட்டத்தில் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளராக நிதிச் செயலாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவாகியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image