ரயில் சாரதிகள் சங்க தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்

ரயில் சாரதிகள் சங்க தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்

ரயில் திணைக்களம் மேற்கொள்ளவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக ரயில் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சருடனான தொலைபேசி கலந்துரையாடலையடுத்து இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்ககொட தெரிவித்துள்ளார்.

ரயில் அனுமதிச் சீட்டு விலையில் மாற்ற தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நள்ளிரவு தொடக்கம் மேலதிக சேவையிலிருந்து விலக ரயில் சாரதிகள் சங்கம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image