ஆசிரியர் ஆட்சேர்ப்பு வயதெல்லையை அதிகரிக்க கோரி கல்வி அமைச்சின் முன்னால் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் ஆட்சேர்ப்பு வயதெல்லையை அதிகரிக்க கோரி கல்வி அமைச்சின் முன்னால் ஆர்ப்பாட்டம்

பட்டதாரி பயிலுனர்களை ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்கும்போது வயதெல்லை அதிகரிக்குமாறு கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நேற்று கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பின்படி மட்டுப்படுத்தப்பட்டுள்ள 35 என்ற வயதெல்லையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்த இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Development_teacher01.jpg

நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் நேற்றையதினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதற்கு சமாந்தரமாக கல்வி அமைச்சுக்கு முன்னால் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

Development_teacher03.jpg

முறைசார் - முறைசாரா துறை தொழிற்சங்கங்களுடன் இணைந்து ப்ரொடெக்ட் சங்கத்தின் மகளிர் தின நிகழ்வு

Development_teacher02.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image