பிரிவெனா ஆசிரியர்கள் கல்வியமைச்சின் முன் ஆர்ப்பாட்டம்!

பிரிவெனா ஆசிரியர்கள் கல்வியமைச்சின் முன் ஆர்ப்பாட்டம்!

பிரிவெனா ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்காதிருக்க மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று (07) கல்வியமைச்சின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை பிரிவெனா ஆசிரியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ்வார்ப்பாட்டத்தினால் கொட்டாவ - பொரல்ல வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர் உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் கோரி கொழும்பில் போராட்டம்

ஏனைய பாடசாலைகளுக்கு இம்மாதம் 6ம்த திகதி தொடக்கம் எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட தீர்மானித்திருந்தபோதிலும் பிரிவெனாக்களில் கற்பிக்கும் சுமார் 7500 ஆசிரியர்களுக்கு அவ்விடுமுறை வழங்கப்படவில்லை என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image