ஐந்தாயிரம் கொடுப்பனவு கிடைக்கவில்லை - அ.இ.போ.சே. ஊழியர்கள் சங்கம்

ஐந்தாயிரம் கொடுப்பனவு கிடைக்கவில்லை - அ.இ.போ.சே. ஊழியர்கள் சங்கம்

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களை தொழிற்சங்க நடவடிக்கைக்கு தூண்டாமல் ஐந்தாயிரம் கொடுப்பனவு உட்பட முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை போக்குவரத்து சேவை ஊழியர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அனைத்து அரச ஊழியர்களுக்கும் வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு இதுவரை தமக்கு கிடைக்கவில்லையென ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பேக்குவரத்து சேவை ஊழியர்கள் சங்கம் அக்கடிதத்தில் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. அக்கோரிக்கைகள் நிறைவேற்றித்தந்தாக வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உடனடியாக 5000 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொடுத்தல்
2018ம் ஆண்டு தொடக்கம் சம்பள அதிகரிப்பை வழங்கல்
2018 ஆண்டு தொடக்கம் சம்பள திருத்தம் மேற்கொள்ளல் மற்றும் நிலுவை சம்பளத்தை பெற்றுக்கொடுத்தல்
2022 வரவுசெலவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு ஒதுக்கப்பட்டிருந்த சுமார் 5000 மில்லியன் ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது. அதனை நிறுத்தி அந்நிதியை மீண்டும் வழங்கல்

மிகுந்த பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து பாரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் இலங்கை போக்குவரத்து ஊழியர்களை பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தூண்டாமல் மேலே குறிப்பிடப்பட்ட கோரிக்கைகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கடிதத்தல் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image