முல்லைத்தீவில் வாழும் மலையக இளைஞர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடல்

முல்லைத்தீவில் வாழும் மலையக இளைஞர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடல்

முல்லைத்தீவில் வாழும் மலையக இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடரபில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தமது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளதாவது,

நீதி அமைச்சரின் விஷேட அழைப்பின் பேரில் முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு, அங்கு இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டதோடு, மலையகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளையும் சந்தித்து கலந்துரையாடினேன்.

இதன்போது மலையகத்தில் இருந்து புலம்பெயர்ந்த எமது இளைஞர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் கேட்டறிந்ததோடு எதிர்கால அபிவிருத்தி தொடர்பாகவும் அவர்களுடன் சினேக பூர்வமான கலந்துரையாடலிலும் ஈடுப்பட்டேன். – என்று தெரிவித்துள்ளார்.

272067730_494800138933974_3116167145268359474_n.jpg

272139660_494800172267304_3380426940515363181_n.jpg

272762999_494800045600650_2060174598067333881_n.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image