பாடசாலைகள் இன்று முதல் மீள ஆரம்பம்

பாடசாலைகள் இன்று முதல் மீள ஆரம்பம்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் விடுமுறைக்குப் பிறகு இன்று திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை கடந்த 2021 டிசம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாகியது.

இந்நிலையில் இன்று திறக்கப்படும் பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பாடசாலைகளை நடத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து இன்று முதல் சிசு சரிய பஸ்கள் வழமை போன்று சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

தேவைப்பட்டால் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாடசாலை போக்குவரத்து சேவைக்கான கட்டணத்தை 20 சதவீதத்தால் இன்று முதல் உயர்த்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மாகாண பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், தமக்கான எந்தவித நிவாரணங்களையும் அரசாங்கம் இதுவரை வழங்கவில்லை என அந்த சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் தெரிவித்துள்ளார்.

குறைந்த விலையில், போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதால் பாரிய நட்டத்தினை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில், அரசாங்கத்திற்கு முன்னதாகவே தெளிவுபடுத்தியிருந்த போதிலும், அது குறித்த எந்த தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை.

மாகாணங்களுக்குள் சேவையில் ஈடுபடுவோர், 15 சதவீதத்தினாலும், மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடுவோர் 20 சதவீதத்தினாலும் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மாகாண பாடசாலை போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image