நாளை நிரந்தர நியமனம்: முதற்கட்ட நியமனம் பெறும் பயிலுனர் பட்டதாரிகளின் எண்ணிக்கை

நாளை நிரந்தர நியமனம்: முதற்கட்ட நியமனம் பெறும் பயிலுனர் பட்டதாரிகளின் எண்ணிக்கை

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளது.

 இதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்திருப்பதாக அமைச்சரவை உபகுழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

53 ஆயிரம் பயிலுனர் பட்டதாரிகள் தற்போது அரச நிறுவனங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றுகின்றனர்.

இவர்களில் ஒருவருடப் பயிற்சிக் காலத்தினை நிறைவு செய்த 42 ஆயிரத்து 500 பேருக்கு நாளை முதல் நிரந்தர நியமனம் வழங்கப்படும்.

அத்துடன் கடந்த வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பயிலுனர் பட்டதாரிகளாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நிரந்தர நியமனம் வழங்கப்படும்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image