அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் தொடர்பான அறிவித்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் தொடர்பான அறிவித்தல்

இணைந்த சேவையிலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் வருடாந்தம் அல்லாத இடமாற்றங்கள் தொடர்பான அறிவித்தலை பொதுச்சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஆலொக பண்டாரவின் கையொப்பத்துடன் நேற்று (31) வெளியிடப்பட்ட சுற்று அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புதிய பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனங்கள் தொடர்பான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அவரகள் நாடளாவிய ரீதியில் பல்வேறு அரச நிறுவனங்களுடன் இணைக்கப்படவுள்ளனர்.

எனவே புதிய உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்கும் வேளையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் உள்ள ஏனைய உத்தியோகத்தர்களின் வருடாந்தமல்லா இடமாற்றங்களைச் செய்வதில் உத்தியோகத்தர்கள் மற்றும் நிறுவனங்களில் ஏற்படும் சிக்கல் நிலைமைகளைத் தவிர்க்க இதுவரை இடமாற்ற உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ள இணைந்த சேவையிலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் வருடாந்தமல்லா மற்றும் இடமாற்றங்கள் தவிர்ந்த ஏனைய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வருடாந்தமல்லா இடமாற்றங்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் 14.01.2022 க்குப் பின்னர் வழமைபோன்று மேற்கொள்ளப்படும் என்பதை இத்தால் தெரியப்படுத்துகிறேன்.

Develop_transfer.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image