ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று நள்ளிரவு முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று நள்ளிரவு முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு

இன்று நள்ளிரவு முதல் சகல பணிகளிலும் இருந்து விலகி தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

பதவி உயர்வு, பயணிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளனர்.

குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ரயில்வே பொது முகாமையாளர் கடிதம் மூலம் நேற்று தொழிற்சங்கங்களுக்கு உறுதிபடுத்தினார்.

எவ்வாறாயினும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

ரயில் நிலைய பொறுப்பதிகாகள் சங்கத்தினர் கடந்த தினங்களில் பொதிகளைப் பொறுப்பேற்றல் மற்றும் பயணச்சீட்டுக்களை விநியோகித்தல் முதலான செயற்பாடுகளில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image