நாளை இடம்பெறவிருந்த ஆசிரியர் நியமனம் வழங்கல் இடைநிறுத்தம்

நாளை இடம்பெறவிருந்த ஆசிரியர் நியமனம் வழங்கல் இடைநிறுத்தம்

மத்திய மாகாணத்தில் நாளைய தினம் இடம்பெறவிருந்த ஆசிரியர் நியமனம் வழங்கல், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார்.

210 தமிழர்கள் உட்பட 306 பேருக்கு நாளைய தினம் நியமனம் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கான அறிவித்தல் கடிதமும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

எனினும், கொவிட் பரவல் உள்ளிட்ட காரணங்களினால் இந்த நியமனம் வழங்கல் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், புதிய திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என்று மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது என்றும், இந்த நியமனங்கள் பின்னர் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image